சென்னை, ஏப்.24- கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியே பதிவாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியிருப்பதாவது: வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் 28 ஆம் தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
25 மற்றும் 26 ஆம் தேதிக ளில் ஆங்காங்கே ஓரிரு இடங்களிலும், 27, 28 ஆம் தேதி சில இடங்க ளிலும் மழை பெய்யக்கூடும். 27, 28 ஆம் தேதி களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, காற்றுடன் கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது. மழை பெய்யாத பகுதிகளில் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் இருக்கும்.